Pages

Friday, August 6, 2010

<< மண்வாசனை.....



வறண்டு போன என்
வாழ்வில்....
மனதுக்கு இதமான
மண்வாசனை....
உன் நினைவால் அதனால்
என் கண்ணீரால் .....

பொய் ....




பொய்கள் சொல்லி பல கவிதைகள்
எழுதி முடித்து விட்டேன்...
இனி உண்மை சொல்லி ஒரு கவிதை....
எந்த கவிதையும் அழகில்லை...
உன்னை போல்....

Thursday, August 5, 2010

நிஜம்.........




பொய் என்பது உண்மை...
உண்மையில் நான் சொன்னது பொய்...

Wednesday, August 4, 2010

பூ...........




ஒவ்வொரு பூவுக்கும்
ஒவ்வொரு வாசம்......
நீ சூடும் பூவுக்கெல்லாம்
ஒரே வாசம்....
அது உன் வாசம்..

கவிஞன்...




அவன் வேதனையால்....
அவனுக்கு புகழ் என்றால்...
அவன் பெயர் தான் கவிஞன்...

Monday, August 2, 2010

அச்சம்...




அச்சத்துடன் தான் கழிகிறது நாட்கள்...
அப்பாவின் மாப்பிள்ளை பார்ப்பு படலத்திலும்...
அண்ணனின் சந்தேக பார்வையிலும்....
இன்னும் உன் மரமண்டைக்கு புரியாத என் காதலுடன்...
அச்சத்துடன் தான் கழிகிறது நாட்கள்..

நண்பன்...




அப்பா கிட்ட, அம்மா கிட்ட...
அண்ணன் கிட்ட, தம்பி கிட்ட..
அக்கா கிட்ட, தங்கை கிட்ட..
மனைவி கிட்ட, குழந்தைங்க கிட்ட..
தாத்தா கிட்ட, சித்தப்பா கிட்ட...
பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட...
இப்புடி யாரிடமும் சொல்ல முடியாத விஷயத்தை..
உன் கிட்ட சிரிச்சுக்கிட்டே சொல்வேன் நண்பா...
இப்போ சொல்லு எது சிறந்தது இந்த உலகில்...